நாகர்கோவிலில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!!

நாகர்கோவில்: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு ரூ.50 உயர்த்தப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. இந்நிலையில் விலை உயர்வை கண்டித்து நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு மகளிர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று விலை உயர்வுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

பொன்னேரியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. துறை சந்திரசேகர் தலைமையில் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணாசிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசை கண்டித்து அவர்கள் முழக்கமிட்டனர். சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், விறகு அடுப்பில் சமைத்தும் நூதன முறையில் அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். ஈரோட்டில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு எதிராக அக்கட்சியினர் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். கைகளில் பதாகைகளை ஏந்தியபடி அவர்கள் முழக்கமிட்டனர். சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் வலியுறுத்தினர்.

Related Stories: