வாரணாசி: கார்கில் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் பெயரை தனது உடல் முழுவதும் பச்சையாக குத்தி உத்தரபிரதேச இளைஞர்சாதனை படைத்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் பண்டிட் அபிஷேக் கவுதம் என்பவர், கார்கில் போரில் வீரமரணம் அடைந்த தியாகிகளின் தியாகத்தை நினைவு கூரும் வகையில், அவரது உடற்பகுதி முழுவதும் வீரமரணம் அடைந்த 631 வீரர்களின் பெயர்களை பச்சை குத்தியுள்ளார்.