ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கல்லாவியை சேர்ந்தவர் சுரேஷ்(40). கூலித் தொழிலாளி. இவரது மனைவி அம்மு (34) 5 குழந்தைகள் உள்ளனர். சுரேசுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று காலையும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் அம்மு மனமுடைந்தார். முதல் 3 குழந்தைகளும் பள்ளிக்கு சென்றுவிட்டனர். பின்னர் மகள் சுபிதா (7), மகன் பீஷ்மர் (5) ஆகியோரை மட்டும் அழைத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார்.