காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர்கள் வாகனங்கள் வாங்கி சுயதொழில் தொடங்க மனியத்துடன் கடனுதவி வழங்கப்படும் என கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளனார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு, புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தை, 2012-13ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் படித்த, சுயதொழில் துவங்க ஆர்வமுள்ள முதல் தலைமுறை தொழில் முனைவோர் பயன் பெறலாம். இத்திட்டத்தின் கீழ், உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த திட்டத்தொகையாக, ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை, தொழில் திட்டங்களுக்கு, மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படுகிறது.