கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுபா நகரைச் சேர்ந்தவர் முத்துராஜ் (53). இவர், கிழக்கு காவல்நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றி வந்தார். இன்று காலை பணிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு காவல்நிலையத்திற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். எட்டயபுரம் ரோடு தலைமை தபால் நிலையம் அருகே வரும் போது பின்னால் வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த முத்துராஜ், சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்து கோவில்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி முத்துராஜ் உடலை கைப்பற்றி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.