காரைக்கால்: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாகப்பட்டினம், காரைக்கால் படகுகளை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காரைக்காலை அடுத்த கீழகாசாக்குடி மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே 5 நாட்டிகல் மைல் தொலைவில் மீன்பிடித்த போது இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து விசைப்படகை துப்பாக்கி முனையில் பறிமுதல் செய்தனர். பின்னர் மீனவர்கள் மட்டும் விடுதலை செய்யப்பட்டனர்.