திருப்பூர்: வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் ரயில் நிலையத்தில் தீடீரென குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பீகார் தொழிலாளி கொலை செய்யப்பட்டதாக வதந்தி பரவியதால் வடமாநில தொழிலாளர்கள் ரயில் நிலையத்தில் குவிந்தனர். தண்டவாளத்தை கடக்க முயன்றபோது பீகார் தொழிலாளி ரயிலில் அடிபட்டு இறந்ததாக காவல்துறை விளக்கமளித்துள்ளது.