ஹத்ராஸ் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு முக்கிய குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை:3 பேர் விடுவிப்பு

ஹத்ராஸ்: உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராசில் கடந்த 2020ம் ஆண்டு செம்டம்பர் 14ம் தேதி 19வயது இளம்பெண் 4 பேர் கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் ஹத்ராஸ் சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு கூறியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சந்தீப்புக்கு(20) நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும் குற்றவாளிக்கு ரூ.50ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வழக்கில் தொடர்புடைய 3 பேரையும் நீதிமன்றம் விடுவித்தது.

Related Stories: