சென்னை: தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய பிரதமர், தலைமை நீதிபதி, எதிர்க்கட்சி தலைவர் கொண்ட குழு முடிவு செய்ய வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தை தீர்ப்பை வரவேற்கிறேன் என முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழுவின் பரிந்துரையின் பேரில் நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று காலை அதிரடியான தீர்ப்பை வழங்கியிருந்தது. தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் முறையில் சீர்திருத்தம் கோரிய வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை அளித்திருந்த்தது.