கடலூர்: கடலூரில் 3வது வார்டு திமுக கவுன்சிலர் பிரகாஷ், மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் மாநகராட்சி 3வது வார்டுக்கு உட்பட்ட காந்திநகர் மாநகராட்சி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக கவுன்சிலர், மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் நல சங்க தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கி பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.