சென்னை: இந்திய கடல்சார் பல்கலைக்கழகமும், ச ஐ.ஐ.டியும் இணைந்து கடல்சார் கல்வி மற்றும் ஆராய்ச்சி மேம்பாடு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உத்தண்டியில் உள்ள கடல்சார் பல்கலைக்கழக அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒருங்கிணைந்து ஆராய்ச்சி சார்ந்த பணிகளை செயல்படுத்துவது, ஒருங்கிணைந்த பி.எச்.டி., படிப்புகள் குறித்த செயல்பாடு, இணைய வழி எம்.டெக் படிப்புகளை நடத்துவது, கருத்தரங்குகள் மற்றும் கல்வி கூட்டங்களை ஒருங்கிணைப்பது, குறுகிய மற்றும் நீண்டகால படிப்புகளை அறிமுகம் செய்வது, கடல்சார் அங்கத்திற்கான படிப்புகளை ஏற்படுத்துவது, தொழிலகங்களுக்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவது என இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய கடசார் பல்கலைக்கழக துணைவேந்தர் மாலினி சங்கர், சென்னை ஐஐடி இயக்குனர் மற்றும் பேராசிரியர் காமகோடி ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.