காஞ்சிபுரம்: உத்திரமேரூர் வட்டம், திருவானைக்கோவில் கிராமத்தை சேர்ந்த 50 பேர் நேற்று காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தியிடம் கோரிக்கை மனு ஒன்று அளித்தனர். அதில், கூறியிருப்பதாவது: திருவானைக்கோவில் கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் 100க்கும் மேற்பட்டோர் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். நாளடைவில் குடும்பங்கள் பெருக்கும் காரணமாக இடப்பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.