அலங்காநல்லூர்: மதுரை மாவட்ட அளவிலான கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி குயின் மீரா பள்ளியில் நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அபிஷேக், சந்தோஷ்குமார், நிரஞ்சன் ஆகியோர் முதல் பரிசாக தங்கம் வென்றனர். சஞ்சய் என்ற மாணவர் வெண்கலம் வென்றார்.
