கொடைக்கானல்: கொடைக்கானல் - பழநி மலைச்சாலையில் பிஎல் செட் அருகேயுள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் விலையுர்ந்த மரங்கள் எரிந்து சேதமடைந்தன.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த பல நாட்களாக இரவில் நடுங்கும் குளிர் நீடித்து வந்தாலும் பகலில் தொடர்ந்து வறண்ட வானிலையே நிலவி வருகிறது. மேலும் கொடைக்கானல் மலைப்பகுதியில் மழை பெய்து 2 மாதங்களுக்கு மேல் ஆவதால் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது.