'மூத்து முதிர்ந்து உதிர்ந்தாலும் தாய் தாய்தானே' - ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்..

பெரியகுளம்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (95)

உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த வரிசையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், “

உங்களைப் போலவே

நானும் கலங்குகிறேன்

மூத்து முதிர்ந்து

உதிர்ந்தாலும்

தாய் தாய்தானே

ஒரு முதலமைச்சரைப்

பெற்றுக்கொடுத்தோம் என்ற

பெருமாட்டியின் பெருமை

மறைவதில்லை

என் பரிவும் இரங்கலும் பன்னீர்செல்வம் அவர்களே

எல்லாத்

துன்பங்களிலிருந்தும்

காலம் உங்களை

மீட்டெடுப்பதாகுக” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: