கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் பனிபொழிவால் பாதிக்கப்பட்டுள்ள முருங்கை விவசாயத்தை மீட்டெடுப்பதற்கான பயிற்சி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. அரவக்குறிச்சி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 50,000 ஏக்கருக்கு முருங்கை விவசாயம் நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு மாத காலம் இங்கு நீடித்த பனிபொழிவால் முருங்கை மரத்தின் குருத்து பகுதிகளை தேயில்லை கொசுக்கள் தாக்கி அவை காய்ந்தன. இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது.