கீவ் : உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரக்கூடிய தாக்குதல் நேற்றுடன் ஓராண்டை நிறைவு செய்துள்ளது. தற்போது இந்த தாக்குதல் தொடர்ந்து கொண்டே உள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 30 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள நேட்டோ கூட்டமைப்பில் தன்னை இணைத்து கொள்ள உக்ரைன் முயன்றது. அப்படி உக்ரைன் இணைந்துவிட்டால் சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தங்களது தலைநகரான மாஸ்கோ நேட்டோ நாடுகளின் இலக்குகளுக்கு இறையாகும் என ரஷ்யா அஞ்சியது. உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் தனது பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என்பதாலேயே தாக்குதலை கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி தொடங்கியது ரஷ்யா. மறுபுறத்தில் அமெரிக்காவின் உலகளாவிய ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரவும் நாங்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம் என்ற புதிய செய்தியை அமெரிக்காவிற்கு சொல்லவே வெகு தைரியமாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.