தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த மீனவர் வேல்முருகன் (42) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவருடன், அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (39), அருண்குமார் (27), மாதவன் (36), கார்த்தி (32), முருகன் (55) ஆகியோர் நேற்றுமுன்தினம் இரவு மீன்பிடிக்க சென்றனர். நேற்று அதிகாலை தனுஷ்கோடி அருகே இந்திய கடல் எல்லையில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.