சென்னை: சென்னை டிஜிபி அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் பார்வேந்தன் நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது சமூக வலைத்தளங்களிலும், பொது மேடையிலும் அவதூறு பேசி வந்த பாஜ பட்டியல் பிரிவு தலைவர் தடா பெரியசாமி மீதான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2021ம் ஆண்டு அவதூறாக பேச தடை விதித்திருந்தது. ஆனால் மீண்டும் தடா பெரியசாமி பொது மேடைகளில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் பற்றி தொடர்ந்து அவதூறு பேசிக்கொண்டே இருக்கிறார்.