நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே மசினகுடியில் இரண்டு சென்ட் நிலம் 2.70 லட்சம் நிதி உதவியுடன் 283 பேருக்கு இலவசம் வீடுகள் கட்டும் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் வீடுகள் கட்டுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் கடந்த 2002ம் ஆண்டில் மசினகுடியில் இந்திரா குடியிருப்பு திட்டத்தின் கீழ் 144 தொகுப்பு வீடுகள் கட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது அதன் பின்பு 21 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு அரசின் சமத்துவபுர திட்டத்தின் கீழ் 283 பேருக்கு இலவச வீடுகள் வழங்கும் திட்டத்திற்கு மாவட்ட நிருவாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.