புதுடெல்லி: நாடு முழுவதும் பத்து மற்றும் 12ம் வகுப்புக்களுக்கான சிபிஎஸ்இ தேர்வுகள் இன்று தொடங்குகின்றது. இது தொடர்பாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் நேற்று அதிரடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், ‘‘10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொபைல், சாட்ஜிபிடி மற்றும் இதர எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படாது. சாட்ஜிபிடியை பயன்படுத்துவது தேர்வில் நியாயமற்ற வழியை பயன்படுத்துவதாக இருக்கும். எனவே மாணவர்கள் சாட்ஜிபிடியை அணுகுவதற்காக பயன்படுத்தப்படும் சாதனம் உட்பட எந்த எலக்ட்ரானிக் பொருளையும் தேர்வு மையத்திற்குள் எடுத்துவர அனுமதி இல்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.