பேரையூர் : டி.கல்லுப்பட்டி அருகே கொட்டத்தில் இருந்த தண்ணீரை குடித்த 16 ஆடுகள் மயங்கி விழுந்து இறந்தன. குடிநீரில் மர்ம நபர்கள் விஷம் கலந்திருந்ததாக விவசாயி போலீசில் புகார் அளித்துள்ளார்.மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே வி.கோபாலாபுரத்தை சேர்ந்தவர் மார்கழிவாசன் (41). விவசாயி. வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று ஆடுகளை மேய்த்துவிட்டு மதியம் தனது தோட்டத்திலுள்ள கொட்டத்தில் ஆடுகளை தண்ணீர் குடிக்க வைத்தார். அப்போது தண்ணீர் குடித்த ஆடுகள் ஒவ்வொன்றாக மயங்கி விழுந்து இறந்தன. மொத்தம் 16 ஆடுகள் சம்பவ இடத்திலேயே இறந்தன. இதனை பார்த்த அவர் மற்ற ஆடுகள் தண்ணீர் குடிக்காமல் பார்த்துக்கொண்டார்.