மானாமதுரை: தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற கராத்தே போட்டியில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த மாணவர் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார். மானாமதுரை ரயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் சிவநாகார்ஜூன். இவர் மானாமதுரையில் கராத்தே பயிற்சியாளராக உள்ளார். கடந்த பிப்.4ம் தேதி தாய்லாந்து நாட்டில் உள்ள தேசிய விளையாட்டு பல்கலைக்கழகத்தில் 3வது மாஸ்டர்ஸ் ஓபன் கராத்தே சாம்பியன் போட்டி நடைபெற்றது.