குலசேகரம்: குமரி மாவட்டம் திருவட்டாரில் நடந்த ஆஞ்சநேயர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் ஒன்றிய சுற்றுலா மற்றும் துறைமுகத்துறை அமைச்சர் ஸ்ரீபத் யசோ நாயக் கலந்து கொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு மட்டும் தற்போதைய பட்ஜெட்டில் ஒன்றிய அரசு அதிக நிதி ஒதுக்கவில்லை. அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சுற்றுலாத்துறையில் அனைத்து மாநிலங்களுக்கும் நிதி பகிர்ந்தே ஒதுக்கப்பட்டுள்ளது.