பாகிஸ்தானில் பயங்கரம்: பஸ் மீது லாரி மோதல் 18 பேர் பரிதாப பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 18 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணம் லக்கி மார்வாட் மாவட்டத்தில் இருந்து தலைநகர் பெஷாவர் நோக்கி பயணிகளை ஏற்றி கொண்டு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. 30க்கும் மேற்பட்டோர், பஸ்சில் பயணம் செய்தனர். இந்த பஸ் கோஹாட் மாவட்டத்தில் சிந்து நெடுஞ்சாலையில் உள்ள கோஹாட் சுரங்கப்பாதைக்கு அருகில் சென்றபோது, எதிரே அதிவேகமாக வந்த லாரி, பஸ் மீது பயங்கரமாக மோதியது.

இதில் பஸ் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 18 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். பலர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து வந்த மீட்பு குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: