இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 18 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணம் லக்கி மார்வாட் மாவட்டத்தில் இருந்து தலைநகர் பெஷாவர் நோக்கி பயணிகளை ஏற்றி கொண்டு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. 30க்கும் மேற்பட்டோர், பஸ்சில் பயணம் செய்தனர். இந்த பஸ் கோஹாட் மாவட்டத்தில் சிந்து நெடுஞ்சாலையில் உள்ள கோஹாட் சுரங்கப்பாதைக்கு அருகில் சென்றபோது, எதிரே அதிவேகமாக வந்த லாரி, பஸ் மீது பயங்கரமாக மோதியது.