சென்னை: மழையால் பாதித்த விவசாயி, மீனவர், உப்பள தொழிலாளருக்கு உடனே நிவாரணம் தர வேண்டும் என பழனிசாமி தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். ஒன்றிய அரசு நிதி வரவேண்டும், காப்பீடு திட்டம் மூலம் நிதி தரப்படும் என தாமதிக்க கூடாது எனவும் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.