88 கோயில்களின் பராமரிப்பு செலவிற்கு அரசு மானியமாக ரூ.3 கோடி நிதி உதவி வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: தமிழ்நாட்டில் கோயில் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவுக்கு அரசு மானியமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3 கோடி நிதி உதவி வழங்கினார். 88 திருக்கோயில்களில் நிர்வாகத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே-விடம் காசோலையை வழங்கினார். பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர் நல வாரியத்துக்கு முதல்வரிடம் உற்பத்தியாளர்கள் ரூ.5 கோடி நிதி அளித்தனர்.

Related Stories: