வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றி, வடிகால் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி செட்டியப்பனூர் அருகே உள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல கட்டப்பட்டிருக்கும் சுரங்கப்பாதை வழியாக வாணியம்பாடியிலிருந்து திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, பெங்களூரு உட்பட வாணியம்பாடியையொட்டியுள்ள பகுதிகளில் உள்ள கிராம பகுதிகளுக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயணிக்கின்றனர்.