ஆந்திரா: ஸ்ரீ காகுளம் சந்தபொம்மாலி கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்தபோது மிதந்து வந்த ஆளில்லா விமானம் மீட்கப்பட்டுள்ளது. 111 கிலோ எடை கொண்ட ஆளில்லா விமானத்தை கடலோர காவல்படையினரிடம் மீனவர்கள் ஒப்படைத்தனர். அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆளில்லா விமானத்தை யார் பயன்படுத்தினார்கள் என விசாரணை மேற்கொன்று வருகின்றனர்.