புதுடெல்லி: குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப்படத்திற்கு ஒன்றிய அரசு விதித்த தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் தொடர்பாக, இங்கிலாந்தின் பிரபல செய்தி ஊடகமான பிபிசி ஆவணப்படம் வெளியிட்டது. 2 பாகங்களாக வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய இந்த ஆவணப்பட வீடியோக்களை யூடியூப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர கடந்த 21ம் தேதி ஒன்றிய அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், ‘பிபிசி ஆவணப்படத்திற்கு ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் விதித்த தடையானது தவறானது.