அசாமில் 7 ரயில்கள் ரத்தால் பல்லாயிரக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்க முடியாமல் தவிப்பு!!

டிஸ்புர் : அசாமில் 7 ரயில்கள் ரத்தால் பல்லாயிரக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். அசாமில் கரீம்கஞ்ச், சில்சார், மங்கல்டோய், நவ்கோங், கலியபோர் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கும் சில மணி நேரத்துக்கு முன்பு அசாமில் 7 ரயில்கள் ரத்தால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ரயில்கள் ரத்து மூலம் இஸ்லாமியர்களை வாக்களிக்க முடியாமல் தடுக்கும் பா.ஜ.க.வின் சதி அம்பலமாகியுள்ளது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.

The post அசாமில் 7 ரயில்கள் ரத்தால் பல்லாயிரக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்க முடியாமல் தவிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: