இதுகுறித்து மதநாயக்கனஹள்ளி காவல் நிலையத்தில் அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் பாஜ வேட்பாளர் சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாக்குப்பதிவின்போது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க ரூ.4.8 கோடி பணத்தை சுதாகர் கொண்டு சென்றதாக பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன் பாஜ வேட்பாளரிடம் இருந்து ரூ.4.8 கோடி பறிமுதல் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு கர்நாடகா முழுவதும் சுமார் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம், மதுபானம், போதைப்பொருள், விலைமதிப்பற்ற உலோகங்கள், பரிசுப் பொருட்கள் போன்றவற்றை தேர்தல் ஆணையர் பறிமுதல் செய்துள்ளார்.
The post வாக்குப்பதிவு நடைபெறும் சில மணி நேரத்திற்கு முன் கர்நாடக பாஜ வேட்பாளரிடம் ரூ.4.8 கோடி பறிமுதல் appeared first on Dinakaran.