பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணர் கோவில் தேவஸ்தான சேர்மன் டாக்டர் விஜயன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தந்திரி தினேஷன் நம்பூதிரிப்பாட், மனோஜ், நிர்வாகி விநயன், தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் ஆகியோர் முன்னிலையில் சேற்றுவாவைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர், பால் பாயாசம் தயாரிப்புக்கு மெகா சைஸ் உருளியை காணிக்கையாக செலுத்தினார். பிப். 25ம் தேதி முதல் இந்த உருளியில் பால் பாயாசம் தயார் செய்து மூலவருக்கு நைவேத்யம் சமர்ப்பிக்கப்படுகிறது.
