தென்காசி: தென்காசி மாவட்டம் வேலாயுதபுரம் சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காவலர் தமிழ்ச்செல்வன் மீது பெருமாள் பட்டியைச் சேர்ந்த காளிராஜ் என்பவர் அரிவாளால் வெட்டினார். காவலரை அரிவாளால் வெட்டிய காளிராஜை கைது செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.