ராமநாதபுரம்: மண்டபம் தென்கடலில் தடை வலை மூலம் பிடித்து வரப்பட்ட 2 டன் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம், பாம்பன் தென் கடலில் இருந்து 264 விசைப்படகுகள் நேற்று முன்தினம் மாலை கடலுக்கு சென்றன. இரவு 10 மணியளவில் ஒரு சில படகுகள் சட்ட விரோத மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளதாக மீன்வளத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, மண்டபம் இந்திய கடலோர காவல் படையின், கடலோர அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் குமரவேல், கடல்வள மேற்பார்வையாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் ரோந்து சென்றனர்.