புதுடெல்லி: டெல்லி பாகிஸ்தான் தூதரகத்தில் விசாவிற்காக பாலியல் ஆசைகளை நிறைவேற்ற கேட்டதாக பெண் குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பாகிஸ்தான் செல்ல பாகிஸ்தானிய விசாவிற்கு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் விண்ணப்பித்திருந்தார். 2022ம் ஆண்டு மார்ச் மாதம் அந்த பெண் தூதரகத்துக்கு சென்ற போது அங்கு உள்ள ஊழியர் ஒருவர் தவறாக நடந்து கொண்டதாக புகார் தெரிவித்து உள்ளார். இது குறித்து அந்த பெண் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் கூறியதாவது: பாகிஸ்தான் தூதரகத்தில் விசா மறுக்கப்பட்டதால் அங்கிருந்து வெளியேறும் போது, என்னை ஆசிப் என்று அடையாளப்படுத்திக்கொண்ட ஒரு அதிகாரி உதவ முன்வந்தார்.