திருவள்ளூர்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட சத்தியமூர்த்தி தெருவில் உள்ள அருள்மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாளுக்கு கருட சேவை உற்சவம் நடைபெற்றது. நேற்று அதிகாலை 5 மணிக்கு மூலவர் விசேஷ அலங்கார சேவையும் தனுர்மாத திருவாராதனம் மூலவர் தரிசனமும் நடைபெற்றது.