வாடிகன் சிட்டி: முன்னாள் போப் 16ம் பெனடிக்டின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வாடிகன் பேராலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. ரோமன் கத்தோலிக்க திருச்சபையை 8 ஆண்டுகள் வரை வழிநடத்திய போப் 16ம் பெனடிக்ட்(95) தனது பதவியைத் துறந்து வாடிகனில் ஓய்வெடுத்து வந்தார். அவரது உடல்நிலை கடந்தசில நாட்களாக கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 31ம் தேதி 16ம் பெனடிக்ட் காலமானார்.