லாஸ் ஏஞ்சல்சில் பயங்கர காட்டுத்தீ: 1,200 பேர் வௌியேற்றம்

கோர்மன்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். லாஸ் ஏஞ்சல்சின் கவுன்டியில் இருந்து வடமேற்கே 100கி.மீ. தொலைவில் உள்ள கோர்மனில் இன்டர்ஸ்டேட் 5 என்ற நெடுஞ்சாலை அருகே உள்ள 3,600 ஏக்கர் பரப்பளவு பகுதியில் நேற்று முன்தினம் முதல் பயங்கர காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.  இதையடுத்து அப்பகுதியை சுற்றியுள்ள 1,200க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வௌியேற்றப்பட்டுள்ளனர். தீயணைப்புத்துறையினர் விமானம், ஹெலிகாப்டர் மூலம் பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்தி அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

The post லாஸ் ஏஞ்சல்சில் பயங்கர காட்டுத்தீ: 1,200 பேர் வௌியேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: