கோவை: கோவையில் யோகா பயிற்சிக்கு பின் காணாமல் போன பெண் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்தக்கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுபஸ்ரீ கோவை ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்கு சென்ற பின்னர் காணாமல் போன நிலையில் 10 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுபஸ்ரீ மரணத்துக்கு நீதி கேட்டு கோவையில் மாதர் சங்கம், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தினர். குடும்ப வழக்கத்திற்கு மாறாக சுபஸ்ரீயின் உடல் எரிக்கப்பட்டு இருப்பதாகவும், இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருப்பதாகவும் தெரிவித்த கோவை எம்.பி.நடராஜன் இதுகுறித்து விசாரணை நடத்த குழு அமைக்க வேண்டும் என்றார்.