கோவை: கோவையில் பிரியாணி சாப்பிட்ட பள்ளி மாணவி திடீரென இறந்தார். கோவை வேலாண்டிபாளையம் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் இந்து பிரியா(12) அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த இந்து பிரியாவுக்கு திடீரென வாந்தி ஏற்பட்டது. வயிற்றுவலியால் துடித்த அவரை பெற்றோர், கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.