ஆற்காடு : ஆற்காடு அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 6 கடைகளுக்கு நேற்று சுகாதாரத்துறையினர் அதிரடியாக ₹900 அபராதம் விதித்து வசூலித்தனர்.
ஆற்காடு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுகுமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ரவி, நிஷாந்த், ஜெயக்குமார், தமிழ்ச்செல்வன் மற்றும் சுகாதாரக் குழுவினர் ஆற்காடு அடுத்த சக்கரமல்லூரில் உள்ள கடைகளில் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது பொது இடங்களில் புகை பிடித்த, புகை பிடிக்க அனுமதித்த மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற வியாபாரிகள் உட்பட 6 பேருக்கு அபராதம் விதித்து ₹900 வசூலித்தனர்.