ஈரோடு: பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக ஈரோட்டில் உற்பத்தியான இலவச வேட்டிசேலைகள் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையின்போது குடும்ப அட்டைதாரகள் விதவைகள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்க பட்டு வருகிறது. இதற்காக ஈரோடு மாவட்டத்திற்க்கு 1.32 கோடிக்கான இலவச வேட்டி, சேலைகள் ஆடர்கள் வழங்கப்பட்டுள்ளது.