நெல்லிக்குப்பம்: கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே நாய்க்குட்டிகளை நல்ல பாம்பு பாதுகாத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லிக்குப்பம் அடுத்த பாலூர் பகுதியை சேர்ந்தவர் சம்பத், இவர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். அதன் அருகில் சிறிய பள்ளம் எடுத்துள்ளார். அதில் நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த நாய் ஒன்று 3 குட்டிகளை ஈன்றுள்ளது. குட்டிகளை அங்கேயே வைத்துவிட்டு உணவு தேடி தாய் நாய் வெளியே சென்றது. அந்த நேரத்தில் அவ்வழியாக ஊர்ந்து வந்த நல்ல பாம்பு, நாய்க்குட்டிகள் அருகே பாதுகாப்பாக இருந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் பாம்பு, நாய்க்குட்டிகளை கடித்து விடுமோ என அஞ்சி குட்டிகளை எடுக்க முயன்றனர்.