சீர்காழி: சீர்காழி அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை இறந்ததால், டாக்டர் இன்றி மருத்துவம் பார்த்ததாக கூறி உறவினர்கள் போராட்டம் நடத்தினர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புளியந்துறை கிராமத்தை சேர்ந்தவர்கள் பாண்டியன்-ரம்யா தம்பதி. விவசாய கூலி தொழிலாளர்களான இவர்களுக்கு, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. 2வது முறையாக கர்ப்பமான ரம்யாவிற்கு, பிரசவலி ஏற்பட்டதால் உறவினர்கள் அவரை சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் ரம்யாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறி தாயையும், சேயையும் மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.