பெதுல்: மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன், உயிரிழந்த நிலையில் இன்று காலை மீட்கப்பட்டார். மத்திய பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டம் மாண்டவி கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுவன் தன்மய், அப்பகுதியில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். சுமார் 40 அடி ஆழத்தில் இருந்த ஆழ்துளை கிணற்றில் சிறுவன் விழுந்ததால், அவனை மீட்பதற்கான நடவடிக்கைகளில் உள்ளூர் மக்கள் ஈடுபட்டனர்.