தென்காசி: குற்றாலம் மெயின் அருவியில் அதிக தண்ணீர் வரத்து காரணமாக குளிக்க விதிக்கப்பட்ட தடை நேற்று இரவு முதல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குற்றாலத்தில் அவ்வப்போது பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதுகாப்பு கருதி நேற்று பகல் முழுவதும் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.