நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் கணவருடன் ஆஜர்

திருச்சி: திரைப்பட நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஜீனத்பிரியா(30). இவர்  சில மாதங்களுக்கு முன் நாடக நடிகரான முனிஷ்ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தில் ராஜ்கிரண், அவரது மனைவி பத்மஜோதி(எ) கதீஜாவுக்கு விரும்பமில்லாததால் மகளுடன் தொடர்பில்லாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் ஜீனத்பிரியா கணவருடன் திருச்சி மாவட்டம் துறையூர் பெருமாள்மாலை அடிவாரத்தில் உள்ள தனது தந்தையான இளங்கோவிடம் (கதீஜானின் முதல் கணவர்) தஞ்சம் அடைந்தார். தற்போது அவர்கள் அதே பகுதியில் வசித்து வருகின்றனர்.

இளங்கோ ஓய்வு பெற்ற வணிக வரித்துறை அலுவலர். இந்நிலையில் கதீஜா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமீபத்தில் மகள் ஜீனத்பிரியா மீது புகார் அளித்தார். அதில் மகள் மற்றும் முனீஷ்ராஜ், இளங்கோ ஆகிய 3 பேரும் தன்னையும், கணவர் ராஜ்கிரண் பற்றி சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தும், தரக்குறைவான வாசகங்களையும் பதிவிட்டு வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்த முசிறி அனைத்து மகளிர் போலீசுக்கு சென்னை கமிஷனர் உத்தரவிட்டார்.

இதையடுத்து ஜீனத்பிரியா உள்பட 3 பேரையும் இன்று முசிறி டிஎஸ்பி அலுவலகத்தில் ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பினர். அதன்படி 3 பேரும் இன்று காலை முசிறி டிஎஸ்பி அலுவலகத்தில் ஆஜராகினர்.  அவர்களிடம் டிஎஸ்பி விசாரணை நடத்தி வருகிறார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: