மலப்புரம்: கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் 160 பேருக்கு தட்டம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவின் அனைத்து மாவட்டங்களிலும் தட்டம்மை பரவினாலும் மலப்புரத்தில் மட்டும் பாதிப்பு அதிகமாக உள்ளது. தட்டம்மை பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகளவு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கேரள மாநில அரசு தகவல் கூறியுள்ளது.