குன்னூர் அருகே வெடிமருந்து தொழிற்சாலையில் மீண்டும் தீ விபத்து: 2 பேர் படுகாயம்

நீலகிரி: அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் காயம் அடைந்தனர். கடந்த 19ம் தேதி தீ விபத்து ஏற்பட்டு 2 பேர் காயமடைந்த நிலையில் இன்று மீண்டும் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இன்று வெல்டிங் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த 2 பேரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த வெடிமருந்து தொழிற்சாலையில் ராணுவத்திற்கு தேவையான வெடிமருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 19ம் தேதி தீ விபத்து ஏற்பட்டு 2 பேர் காயமடைந்த நிலையில் இன்று காலை மீண்டும் வெல்டிங் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் பலத்த காயமடைந்தனர். தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த வெடிமருந்து தொழிற்சாலையில் இதுபோன்ற தீ விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் அதில் பணிபுரியும் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

Related Stories: